தமிழி எழுத்துகள்-14

தமிழி எழுத்துகள்-14

தொண்டூர் தமிழி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ளது தொண்டூர். இவ்வூரில் உள்ள "பஞ்சனார் படி" எனும் மலைக்குன்றில் உள்ள குகைத்தளத்தில் தமிழி கல்வெட்டு உள்ளது. 1991 ம் ஆண்டு தொல்லியல்துறை அலுவலர் சந்திரமூர்த்தி அவர்களால் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது.

கல்வெட்டு:

(இ) ளங்காயிபன் ஏவ அகழ்ஊரறம்
மோசி செய்த அதிடானம்.

இவ்வாக்கியத்தின் இறுதியில் மூன்று கோடுகள் காட்டப்பட்டுள்ளது. இது படுக்கைகளின் எண்ணிக்கையை குறிப்பதாய் இருக்கலாம். இளங்காயிபன் என்பவர் பணிக்க(ஏவ) அவரது ஆணைப்படி அகழூரினர் இந்த அறத்தை செய்கின்றனர். படுக்கை அல்லது இருக்கை(அதிடானம்) அமைத்தவர் மோசி என்பவராவார். 

இளங்காயிபவன் என்பவரை ஆசிவகராய் இருக்கலாம் என நெடுஞ்செழியன் கருதுகிறார். இன்றும் தொண்டூர் அருகே அகலூர் எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
மோசி எனும் பெயர் புறநானூற்றிலே கூட வருகிறது! "திருந்துமொழி மோசிபாடிய ஆயும்" (புறம்-158)

இதன் காலம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு.

புகைப்பட உதவி: வரலாற்று விரும்பிகள் சங்கம்




No comments:

Post a Comment