தமிழி எழுத்துகள்-13
குன்னக்குடி தமிழி:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-காரைக்குடி சாலையில் அமைந்துள்ளது ஊர் குன்னக்குடி, இங்குள்ள குகைத்தளத்தில் 'ஞானியர்மடம்' என்ற சிறுமண்டபமும் பிற்காலத்திய முனிவர் சிலையும் உள்ளது. இதில் வெட்டப்பட்ட நீர்வடி முகப்பில் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளது. 1909 ம் ஆண்டு இக்கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டது.
முதல் கல்வெட்டு:
காபிஊர் ஆதன்சாத்தன்
விளக்கம்:
காபிஊர்=காப்பியம்+ஊர் இன்றும் கூட சீர்காழியருகே காப்பியங்குடி எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது! காப்பியம் என்பது குடிப்பெயர் ஒன்றாய் கருத இடமுள்ளது. காப்பியாற்று காப்பியனார். காப்பியன் சேந்தனார்.போன்ற புலவர்களின் பெயர்களை இதற்கு உதாரணமாய் கொள்ளலாம். காப்பியங்குடி என்பதே காப்பிஊர் என மாறியிருக்கக்கூடும். காப்பிஊரை சேர்ந்த ஆதன் சாத்தன் எனும் பெயர் மட்டும் உள்ளது. அவர் இந்த குகைத்தத்தின் நீர்வடியை ஏற்ப்படுத்தியவராய் இருக்கலாம். ஆதன் எனும் பெயர் அன்று பரவலாய் தமிழகமெங்கும் பயின்று வந்துள்ளது! இக்கல்வெட்டு தலைகீழாய் வெட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் கல்வெட்டு:
ஊறு து..
விளக்கம்:
ஊற்று ஒன்றினை ஏற்ப்படுத்தாயவர் பெயர் வந்துள்ளதை யூகிக்கலாம். ஆனால் அதற்கடுத்த எழுத்துகள்
சிதைந்துள்ளதால் முழுமையாக கூறமுடியவில்லை. இவ்விரு கல்வெட்டும் கி.பி 3 ம் நூற்றாண்டாகும்.
கல்வெட்டு படஉதவி: Saravana Manian P A






No comments:
Post a Comment