மாமண்டூர் தமிழி:
திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சி-வந்தவாசி சாலையிலுள்ள ஊர் மாமண்டூர். 1939 ல் இங்கு தமிழி எழுத்து இருப்பதை கண்டறிந்தனர். இங்குள்ள சிறிய குன்றின் குகைத்தளத்தின் முகப்பில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது.
கல்வெட்டு:
கணிமான்
தேனூர் தந்த கோன்குன்று ஆசி
செயிதான் தசன் சிறு
...........வன்
விளக்கம்:
சிற்றரசர்களை குறிக்கும் தமிழி எழுத்துகளில் இதுவும் ஒன்று. இதில் முதன்முதலாய் கல்வெட்டை வெட்டிய தச்சனின் பெயரும் வருகிறது!
தேனூரை கைப்பற்றிய தலைவனான(கோன்) கனிமான் என்பவனுடைய குன்று இது. இதில் பந்தல் அமைத்து தங்கும் வசதி(ஆசி) செய்த தச்சன்(தசன்) சிறு...வன் என்பவர் ஆவர். இன்றும் பந்தல் அமைக்க அன்று ஏற்படுத்திய துளைகளுக்கு கீழேதான் கல்வெட்டு உள்ளது. சிறு எனும் வார்த்தைக்கு இடையேயுள்ள கல்வெட்டு தேய்ந்ததால் இச்சிற்பியின் பெயரை அறியமுடியவில்லை.
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், கானப்பேர் தந்த உக்கிரபெருவழுதி என்ற பாண்டிய மன்னர்கள் குறித்து சங்கஇலக்கியம் பாடுகிறது. இதில்வரும் "தந்த" எனும் சொல் வெற்றிபெற்ற எனும் பொருளில் வருகிறது. அதேபோல் இக்கல்வெட்டிலும் "தேனூர் தந்த கோன்" குறித்து குறிப்புவருவதை அறியலாம். இக்கல்வெட்டின் காலம் கி.பி 3ம் நூற்றாண்டாகும்.
P.c : Thiyagarajan Ekambaram





No comments:
Post a Comment